ஏன் எத்தின ஆம்பிளையள் இருக்கினம் அதெல்லாம் விட்டுட்டு உங்கயிருந்து அவதார்2 எடுக்கவா டிஸ்கஸ் பண்ணுறியள்.
யாழ்ப்பாணம் இருக்கிற நிலைமக்கு ரொம்ப முக்கியமான கொன்செப்ஃட்.மூண்டு வருடமாகியும் படம் வெளிவராத நிலையில் இவர் இன்னுமட் பள்ளி பெட்டையளிட்ட கதாநாயகியா நடிக்க கேக்கிறது தான் பெரிய்ய காமடி..! இதில சில (MMS Internet போன்றவை அறியாதவர்கள்) பெற்றோர்
என்ர பிள்ளையும் மேடைல ஆடுது..!
கடைசி நல்ல வடிவு தானே அதான் செவ்வேளய்யாவே கேட்டார் நடிக்க விட்டுட்டன்..
அவள் வீட்ஐடயே நல்லா ஆடுறவள் மானாட மயிலாடவில வாறமாதிரி தலையும் இழுத்து விட்டுட்டு போட்டோ எத்து வச்சிருக்கிறாள். படிப்பும் நல்ல மாதிரி அதான் ஆசைபட்ட மாதிரி நடிக்க வி்டுட்டன்...
என்பதை போன்ற உணர்ச்சி கரமான வசனங்களை கேட்டிருக்கிறோம்.
நாசமாப்போவான் பிள்ளை தனக்கு 8 மணிக்கு டான்ஸ் புறோகிறாம் முடியும் எண்டவள் பிள்ளை இரவு பிள்ளைக்கு போன் பண்ணினா போன் ஓஃப் மணிக்கு நிகழ்ச்சி நடந்த வீரசிங்கம் மண்டபத்துக்கு போனா அங்க காணேல்ல திரும்பி வீட்வாறம் வான்ல கொணந்து விட்டுட்டு போயிருக்கிறாங்கள் படிக்கிற பொம்பிள பிள்ளைக்கு போதை மயக்கம் தம்பி. கேட்டா சினிமா துறை இப்பிடி தானாம் இந்தியாவிவருந்து பெரிய டைரக்டரோட பாட்டியாம். நாங்கள் எளிய குடும்பம் தம்பி.. நாசமாக்கி போட்டாங்கள்.
இதை சொன்ன தந்தை தற்போது ராணுவத்துக்கு கிளைமோர் வச்ச குற்றச்சாட்டில் சிறையிலிருக்கிறார்.
இந்த செவ்வேளைபற்றி வெளிப்படுத்த முயன்ற போது உதயன் பத்திரிகைக்கு அரசாங்கத்தோடு சேர்ந்து சீல் வைக்க முயன்றார் அதற்கு பின் அப் பத்திரிகை இவர் குறித்த செய்திகளை வெளியிடுவதையே நிறுத்திக்கொண்டது. யாருமே பார்க்காத யாழ்ஓசை என்ற பெயர் தெரியாத பத்திரிகை இவரை பற்றி பணங்கொடுக்கும் போதெல்லாம் புகழ ஆரம்பித்தது.
ஒரு கலியாண வீட்டு புகைப்படகாரர் போதும் சினிமா போன்ற போஸ்டர் படம் எடுத்து வெளியிடுவதற்கு..! அதை காட்டி பல வருடங்களாக பல மக்கள் வியர்வை ரத்தம் தியாகம் செய்து ன விடுதலைக்காய் சேர்த்த பணத்தை அனுபவித்து வரும் ஒரு கூட்டத்தின் முகத்திரை கிழிக்கும் இத்தொடருக்கு தாங்கள் வழங்கி வரும் ஆதரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி உணர்வுள்ள என் இனமே!
இன்னும் அதிர்ச்சி தகவல்கள் ஆதாரங்களுடன் தொடர்ந்து வரும்.


No comments:
Post a Comment